கொரோனா தடுப்பு நடவடிக்கை.! மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா ஆலோசனை நடத்தி வருகிறார்.

அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன.

மத்திய சுகாதார துறை அறிவுறுத்தலின் பேரில் மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்துகளில், குறிப்பாக சர்வதேச விமான சேவைகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் காணொளி வாயிலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment