முதல்வர் எழுதிய “உங்களில் ஒருவன்” நூல் – இன்று வெளியிடும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலை இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிடுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள “உங்களில் ஒருவன்” என்ற சுய சரிதை நூலின் முதலாவது பாகம் இன்று  வெளியிடப்படுகிறது.

அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையகூட்டரங்கில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமயில், திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் ,”உங்களில் ஒருவன்” நூலின் முதலாவது பாகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,விழாவின் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  உரையாற்றுகிறார்இவ்விழாவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதனையடுத்து,சென்னை தனியார் ஓட்டலில் நடைபெறும் விருந்தில் ராகுல் காந்தி,கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தேசிய அளவிலான அடுத்தகட்ட அரசியல் சூழல் குறித்து முதல்வர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.