சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நட்சத்திர வீரர்கள் பங்குபெறும் கிரிக்கெட் தொடர் ! டைட்டில் ஸ்பான்சராக இணைந்த நிறுவனம்

ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட்  தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த டி -20  தொடரில் இந்தியா ,தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 5 அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்திய அணியின்  முன்னாள் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்,சேவாக்,மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பிரையன் லாரா ,சந்தர்பால் ,ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் பிரெட் லீ,தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ்,இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள்.இந்த போட்டியின் போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக “Unacademy ” என்ற  நிறுவனம் இணைந்துள்ளது.