U-19 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 47 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.  47 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 231 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 9 விக்கெட் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், இங்கிலாந்து இறுதிபோட்டிக்கு முதலில்  தகுதி பெற்றது. இன்றைய 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி வருகின்ற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும்.

author avatar
Castro Murugan