சென்னையில் மேலும் இரண்டு சுரங்கபாதைகள் மூடல்..!

கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை  மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால், தி.நகர் மேட்லி சுரங்க பாதை மற்றும் ரங்கராஜபுர சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.