மாநாடு ரிலீசுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது வெங்கட் பிரபுவா.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!

மாநாடு படத்தை ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று தருவதாக கூறி, பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக வெங்கட் பிரபு கூறிவிட்டாராம். மாநாடு ரிலீஸ் சமயம் இதுவும் ஒரு பிரச்சனையாக மாறியிருந்தது.

பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி சிம்புவின் கம்பேக் கமர்சியல் ஹிட் திரைப்படமாக மாநாடு வெளியாகியுள்ளது. அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் 25ஆம் தேதி ரிலீஸ் என கூறி, அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வந்த வேளையில் திடீரென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பட ரிலீஸ் தள்ளிவைத்து விட்டதாக அறிவித்தார்.

அதன் பின்னர் சிலர் உதவி செய்ததன் பின்னணியில் இந்த படம் சொன்ன தேதிதியில் ரிலீஸ் ஆனது. ஆனால் , முதல் நாள் 4 மணி 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இதன் பின்னணியில் இயக்குனர் வெங்கட் பிரபு தான் இருந்தாராம். அதாவது, மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசி விற்று தருவதாக கூறினாராம். ஆனால், கடைசி நேரத்தில் அந்த நிறுவனம் கைவிட்டு விட்டதாக பின்வாங்கிவிட்டாராம்.

சாட்டிலைட் உரிமம் விற்கும் தொகை கொண்டுதான் பைனான்சியர்களுக்கு செட்டில் செய்யவேண்டி இருந்தது. ஆனால், சாட்டிலைட் உரிமம் விற்காத காரணத்தால் மனமுடைந்த சுரேஷ் காமாட்சி இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதன் பின்னர், உதயநிதிஸ்டாலின் மூலம் கலைஞர் டிவிக்கு சாட்டிலைட் உரிமம் சென்று அதன் பின்னர் சில காரணங்களால் அதுவும் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர், சிம்புவின் அப்பா டி.ஆர் தொலைக்காட்சி உரிமத்துக்கான பணத்தை தயாரிப்பாளரிடம் கொடுத்து அந்த உரிமத்தை வாங்கிவிட்டார். படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆனது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.