சென்னை பள்ளிகளுக்கு நாளை மறுநாள் வேலை நாள்!

சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிப்பு.

சென்னையில் வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இதில், வரும் 3-ஆம் தேதி சனிக்கிழமை  அன்று ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் கிடையாது என்றும் 6  முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment