தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில், விண்ணப்பிக்காத மாணவர்கள் http://tngaasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் நுழைவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரம் மிகக்குறைவாக இருப்பதால், காலதாமதம் செய்யாமல் உடனே சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கவும்.
இதுவரை அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக 2.37லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 8 முதல் தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.