மாணவர்கள் கவனத்திற்கு..! கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது. இந்நிலையில், விண்ணப்பிக்காத மாணவர்கள் http://tngaasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் நுழைவுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரம் மிகக்குறைவாக இருப்பதால், காலதாமதம் செய்யாமல் உடனே சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கவும்.

இதுவரை அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக 2.37லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 8 முதல் தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.