தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – இன்று 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

இன்று தமிழகத்தையே கண்ணீர் கடலில் மூழ்கடித்த நாள் என்றே சொல்லலாம். ஆம்…. ஸ்டெர்லைட்க்கு எதிராக 100 நாட்கள் அமைதியாக போராடிய அப்பாவி மக்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டுக்கொன்று இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகின்றன.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்தனர். இன்று அவர்களுக்கு ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சொல்லமுடியாத துயரமான இந்த நாளில், பலியான 13 பேருக்கும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மரியாதையும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.