மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.அதே ஏரியாவில் வசித்த தியாகி கக்கனின் மகன் உள்ளிட்டோர் வசித்து வந்தனர்.திடீரென அங்கு வேறொரு திட்டத்தை அரசு கொண்டுவர முடிவு செய்தது.

இதனால் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து அவர் திடீரென அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.பின் வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.அதே ஏரியாவில் வசித்த தியாகி கக்கனின் மகன் உள்ளிட்டோர் வீடுகளை காலி செய்துவிட்டு கிளம்பினர்.

இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் நல்லகண்ணுவிற்கு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

தற்போது நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் தியாகி கக்கனின் குடும்பத்திற்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Leave a Comment