திருப்பத்தூர் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை.! மர்ம கும்பல் வெறிச்செயல்.!

திருப்பத்தூர் நகரபகுதி பாஜக துணை தலைவர் கலிகண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் நகரபகுதி பாஜக துணை தலைவராக பதவியில் இருந்தவர் கலிகண்ணன். இவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத வேப்பாலம்பட்டி பகுதியில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார்.

இவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. விஷயம் அறிந்து வந்த காவல் துறையினர் கிருஷ்ணகிரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் நேரில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போது, எதற்காக இந்த கொலை நடைப்பெற்றது, கொலையாளிகள் யார் என்ற தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment