டிக் – டாக் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! உங்களுக்காக ஒரு விழா!

இன்றைய இளம் தலைமுறையினரை அதிகமாக கவர்ந்திழுத்துள்ள ஒன்றாக இருப்பது இந்த டிக்-டாக் செயலி தான். இந்த செயலியின் மூலம், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடீயோவிற்காக பலரும் ஆபத்தான இடங்களில் இருந்தும் வீடியோ எடுக்கின்றனர்.

இந்நிலையில், புனேவில் டிக் டாக் திரைப்பட விழா ஒன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரகாஷ் யாதவ் நடத்துகிறார். இந்த விழா குறித்து அவர் கூறுகையில், பலரும் இந்த செயலியில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.  பல மாணவர்கள் கல்லூரிக்கு வெளியில் நின்றும், வீடியோ எடுப்பதையும் பார்த்துள்ளேன் . இவர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்று தான் இந்த விழாவை ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.

மேலும், இந்த விழாவில் இந்தி மற்றும் மராத்தி மொழியில் வெளியான டிக் டாக் வீடியோக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார். இந்த வீடீயோக்களை அனுப்ப வரும் 20-ம் தேதி தான் கடைசி நாள். இதில் சிறந்த காமெடி, குணசித்திர நடிப்பு, சிறந்த ஜோடி, சமூக விழிப்புணர்வு, சுற்றுசூழல் என 12 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும், முதல் பரிசு ரூ.33,333, இரண்டாம் பரிசு ரூ.22,222 என்றும், பங்கேற்கும் அனைவர்க்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.