துப்பாக்கி-2 டைட்டில்.! தயக்கமில்லா தயாரிப்பாளர்.! தயங்கும் A.R.முருகதாஸ்.?!

.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் செய்தி அறிந்தவுடன் கலைப்புலி எஸ்.தாணு இயக்குனர் முருகதாஸிடம் துப்பாக்கி படத்தின் தலைப்பை தாங்கள் எடுத்து கொள்வதாக இருந்தால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளாராம்.

தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 65வது திரைப்படமாக உருவாக உள்ளது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி ஆகிய திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. மற்ற படங்களைவிட குறைவான அளவே வரவேற்பை பெற்றது சர்க்கார் திரைப்படம்.

ஆதலால், இந்த படத்தை எப்படியும் பெரிய வெற்றி படமாக்க வேண்டும் என இயக்குனர் முருகதாஸ் கடுமையாக உழைத்து வருகிறார். இந்த படம் முதலில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டு வந்தது.

அதன் தலைப்பை துப்பாக்கி பட தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தர மறுக்கிறார் என்ற தகவலும் உலாவி வந்தது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் செய்தி அறிந்தவுடன் கலைப்புலி எஸ்.தாணு இயக்குனர் முருகதாஸிடம் துப்பாக்கி படத்தின் தலைப்பை தாங்கள் எடுத்து கொள்வதாக இருந்தால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள். தனக்கும் நண்பர் விஜய்க்கும் நல்ல நட்பு இருக்கிறது என குறிப்பிட்டு தலைப்பை தர ஆட்சேபனை இல்லை என தெரிவித்தாராம்.

ஆனால், முருகதாஸ் முதலில் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க எண்ணினாராம். அதன்பிறகு தற்போது புதிய கதையை உருவாக்கி வைத்துள்ளாராம். ஆதலால் தேவைப்பட்டால் துப்பாக்கி படத்தின் டைட்டிலை எடுத்துக் கொள்ளலாம் அல்லது புதிய தலைப்பையே படத்திற்கு வைத்து கொள்ளலாம் என்கிற முடிவில் இயக்குனர் முருகதாஸ் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.