நாங்குநேரி தொகுதி ! காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெறலாம்-கே.எஸ்.அழகிரி

நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.