பிரதமர் தேநீர் விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள் – நடிகர் பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது அரசியல் கட்சியினரின் பேச்சுக்களுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

அதில், இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள். ஒரே நாடு, ஒரே மொழி எனும் திட்டத்தை செயல்படுத்தவே அமித்ஷா முயற்சிக்கிறார். இந்தி மொழியைக் கொண்டு வருவதால் உங்கள் திட்டம் என்ன? நாட்டில் பல முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது ஏன் இதில் கவனம் செலுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் தற்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் குறித்து பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், பிரதமர் தேநீர் விற்றதை நம்பியவர்கள், அவர்  நாட்டை விற்று கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal