காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆண் – திருநங்கை! சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது மதுரை நீதிமன்றம்!

தூத்துக்குடி சங்காரப்பேரி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவர் ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்து, தூத்துக்குடி சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் திருமண சான்றிதழ் வேண்டி பதிவாளரை அணுகியபோது ஒரு ஆணுக்கும் திருநங்கைக்கும் ஆன திருமணத்தை பதிவு செய்ய இயலாது என கூறிவிட,

அதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆய்வாளர் என அனைவரிடமும் முறையிட்டு பிறகு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி இவர்களுக்குபதிவு சான்றிதழ் அளிக்க உத்தரவும், இவர்கள் திருமணத்தை கலப்பு திருமணமாக அங்கீகரித்து அவர்களுக்கான சலுகைகளையும் வழங்க உத்தரவிடப்பட்டது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment