தூத்துக்குடி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவரா நீங்கள்? அப்போ தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை கவனிக்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் முக்கிய அறிவிப்பை காயல்பட்டிணம் பகுதிவாழ் மக்களுக்கு வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிண அரசு மருத்துவமனையில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் மார்ச்.,25முதல் ஏப்.,1 வரை சிகிச்சைக்காக காயல்பட்டிண அரசு மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தங்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல் இருமல், மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் மற்றும் மருத்துவ உதவிக்கு கீழ் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு அழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படிகிறது.

காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சென்று வந்த அனைவருக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் அவர்களின் முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் உடன் அறிவித்துள்ளார்.

 

author avatar
kavitha