தோல்வியை தழுவிய இலங்கை அணி….! துவைத்து எடுத்த ஆப்கானிஸ்தான்…!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே வங்க தேசத்திடம் தோல்வி அடைந்த இலங்கை அணி, நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்து. ரஹ்மத் ஷா 72 ரன்களும், இஹ்ஸானுல்லா 45 ரன்களும் எடுத்தனர்.

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரஹ்மா ஷா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த தொடரின் அடுத்த போட்டியாக இன்று இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment