இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும் – இயக்குனர் சேரன்

இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும். மீண்டும் இங்கும் ஒருசாரார் மட்டுமே பயன்பெறுவது  மாற வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், திரையுலக பிரபலங்கள்  அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழலில், ஜோதிகா நடிப்பில், ‘பொன்மகள் வந்தாள்’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதுகுறித்து கருது தெரிவித்துள்ள இயக்குனர் சேரன், ‘இந்த வாய்ப்பு எல்லா திரைப்படங்களுக்கும் கிடைக்க வேண்டும். மீண்டும் இங்கும் ஒருசாரார் மட்டுமே பயன்பெறுவது  மாற வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.