அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் எல்லாம் ஓசி டிக்கெட்டில் பயணம் செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துநர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இதுதான் “தமிழ் மாடல்”! சுயமரியாதை சுயமரியாதை என்று நொடிக்கு நூறு முறை கீச்சலிடும் “திராவிட மாடல்” அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி என பதிவிட்டுள்ளார்.
இதுதான் “தமிழ் மாடல்”!
சுயமரியாதை சுயமரியாதை என்று நொடிக்கு நூறு முறை கீச்சலிடும் “திராவிட மாடல்” அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி.
A grandmother lands a tight slap to the entitled likes of Shri.Ponmudi, Min in the current @arivalayam govt! pic.twitter.com/rREKnU4dtp
— K.Annamalai (@annamalai_k) September 29, 2022