ராதிகா சரத்குமார் போட்டியிடும் தொகுதி இதுவா…..!

சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர் விவேகானந்தா அவர்கள், ராதிகா சரத்குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தர்தல் முன்னேற்பாட்டு பணிகளிலும், தேர்தல் பிரச்சார பணிகளிலும்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர் விவேகானந்தா அவர்கள், ராதிகா சரத்குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.