இது தமிழர்களுக்கு பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம் – ப.சிதம்பரம்

அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்காக நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், இந்தியா கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளது, இலங்கைக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருப்பதை குறிக்கிறது.

இந்தியாவின் இந்த செயலுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ப.சிதம்பரம் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டர்  பதிவில், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல்.

இச்செயல் ஒன்றே போதும், அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.