இது எனக்கு புதிதல்ல! இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன் – சீமான்

என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் வறுமையில் வாடும் இவர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து, சீமான் அந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். 

அதன் பின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய சீமான், தி.மு.க.வினர் மதுவுக்கு எதிராக போராடுவது வேடிக்கையாக உள்ளது. அதிக சாராய ஆலைகள் வைத்திருப்பது அவர்கள் தான். நாங்கள் அரசுக்கு சாராயத்தை விநியோகிக்க மாட்டோம். சாராய ஆலைகளை மூடுவோம் என்று அவர்கள் சொல்லவே இல்லையே. இது மலிவான அரசியல் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன் என்றும், மத்திய சுகாதாரத்துறை மந்திரி கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதை ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.