திருவள்ளூரில் மேலும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் !

திருவள்ளூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1101 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று(ஏப் 27) மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலைையில் இன்று மட்டும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் திருவள்ளூரில் கொரோனாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Vidhusan