திருப்புவனம் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கடையடைப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் பாமக  நிர்வாகி ராமலிங்க படுகொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கக்பட்டடுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம்.இவர் கடந்த 5_ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக காவல்துறை இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே ராமலிங்கபடுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக திருபுவனம் , திருவிடைமருதூர் , திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.  திருநாகேஸ்வரத்தில் நாளை நடைபெற உள்ள ராகு பெயர்ச்சியை முன்னிட்டு  வெளியூரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரும் நிலையில் கடையடைப்பு போராட்டத்தால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment