தினம் ஒரு திருப்பாவை

  • மார்கழி மாதத்தில் மனமுருகி படிக்க வேண்டிய பதிகம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
  • பாவைகள் கண்டிப்பாக பாடவேண்டிய பதிகம் இன்றைய பாடல் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்து பாடுவோம் திருமாலின் திவ்ய பாதத்தில் சரண் புகுவோம்

திருப்பாவை

பாடல் : 8

கீழ்வானம் வெள்ளென் றெஉமை சிறுவீடு

மெய்வான் பரந்தனகான்! மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்துநின்றோம், கேது கலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,

ஆவாவென் றராய் தருளேலோ ரெம்பாவாய்.

-ஸ்ரீ ஆண்டாள்-

பாடல் விளக்கம் :

மனமகிழ்ச்சியுடைய பெண்ணே! கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் சிறிது நேரம் விடுதலை பெற்று மேய்வதற்காகச் சென்று பரவியுள்ளன. நோன்பு செய்யும் இடத்திற் பலர் சென்றுவிட்டனர்.மீதமுள்ளவர்களும் அங்கே கும்பிடும் நோக்கத்தோடு புறப்படுகின்றனர்; அவர்களைப்  போகவிடாமல் நிறுத்தி வைத்து, உன்னை அழைக்க வந்து நின்றோம், எழுந்து வா! நம் இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரனது வாயைப் பிளந்தவன்; கஞ்சன் ஏவிய மல்லர்களை அழித்தவன்; தேவர்கல் எல்லார்க்கும் பெரிய தேவன்! அவனை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், ‘ஆ’ என்று வாய் திறந்து இரக்கம் காட்டி ‘வா’ என்று அழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்.

 

author avatar
kavitha