மாணவர்களின் இந்த விவரங்களையும் இனி செயலியில் பதிவிட வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளி மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம், பங்குபெறும் போட்டிகள், வெற்றி – தோல்வி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இனி செயலியில் பதிவு செய்ய உத்தரவு. 

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை பதிவை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது, பள்ளி மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம், பங்குபெறும் போட்டிகள், வெற்றி – தோல்வி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இனி செயலியில் பதிவு செய்து அதை தொடர்ச்சியாக கண்காணிக்க CEO-க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், தகுதியான மாணவர்களுக்கு SDAT மூலம் தொடர் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment