நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இன்னும் 6 வாரங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் என மத்திய அரசு உறுதிபடக் கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. 150 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது இந்திய நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தற்பொழுது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடும் திட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த தடுப்பூசி தட்டுப்பாடு மேலும், இடையூறாக உள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்துள்ள கோவிட் -19 பணி குழுவின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவம் வல்லுநருமான டாக்டர் என்.கே.அரோரா அவர்கள், இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான முடிவுகள் அனைத்தும் அறிவியல் ஆதாரங்களை பயன்படுத்தி எடுக்கப்படுவதாகவும், இந்த கொரோனா வைரஸ் சிலகாலம் இருக்கக் கூடியது தான் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம் எனவும், மக்கள் போதுமான அளவில் இதில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் முன்னோக்கி நடைபோடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி பற்றாக்குறை என்பது அடுத்த ஆறு வாரங்களுக்கு மட்டும் தான் என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன் எனவும், ஜூலை மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி மாதமொன்றுக்கு 20 முதல் 25 கோடி டோஸ்கள் வரை அதிகரிக்கும் என தாங்கள் அறிந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தவிர்த்து ஜைடஸ் கேடிலா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் அண்ட் ஜான்சன் மாதங்களில் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…