சிம்புவை பார்த்து ஏங்காத பெண்கள் இல்லை,எனக்கு சிம்பு மீது ஒரு கிரஷ்- சீரியல் நாயகி பேட்டி

சிம்பு படங்கள் மூலம் ரசிகர்களிடம் எவ்வளவு பிரபலமானார் என்பது தெரிந்த விஷயம். அதேபோல் அவர் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது சர்ச்சைகள் தான்.

ஆனாலும் வெற்றியோ, தோல்வியோ எந்த நேரத்திலும் அவருக்கு துணையாக இருந்தது ரசிகர்கள். இப்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் படத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடித்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து வருபவர் சரண்யா.

இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், செல்லக்குட்டி சிம்பு மீது தனக்கு சீக்ரெட் கிரஷ் இருந்ததாக பேசியுள்ளார். கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியா என்னது இது என்று எல்லோரும் பேசினார்கள், ஆனால் அப்படம் மூலம் வாய் அடைக்க வைத்தார்கள்.

மேலும் மேலும் உருகி உருகி என்று அவர் சொல்லும் இடத்தில் மற்ற பெண்கள் எல்லோரும் இப்படி ஒரு காதலன் நமக்கு இருக்க மாட்டானா என்று எல்லோரும் ஏங்கி இருப்பார்கள்.

ஆனால் அவரது நடிப்பை வெளிக்காட்டும் அளவுக்கு அவர் படங்கள் தேர்வு செய்யவில்லையா, இல்லை அவருக்கு படங்கள் வருவது இல்லையா என்று தெரியவில்லை. அது நம்மை போல ரசிகர்களுக்கு துர்ஷ்டமான ஒரு விஷயம் என்றார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment