புத்தகத்தை நீக்கியதில் எந்த  அதிர்ச்சியும்  இல்லை -அருந்ததி ராய் விளக்கம்

“Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.அவர்  கூறுகையில் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின்  பாடத்திட்டத்தில் இருந்து ” Walking with the Comrades”  என்ற எனது புத்தகத்தை நீக்கியதில் எந்த  அதிர்ச்சியும்  இல்லை .பாடத் திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் எனக்கு தெரியும்.எனது பணி எழுதுவதே. வாசகர்களைப் பொறுத்தே இலக்கியங்களின் முக்கியத்துவம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்,