#Breaking : தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி,

  • ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக செய்யப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  •  தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சுற்றுசூழல் மற்றும் வனத்துறை இணை செயலாளராக அருண்சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அகதிகள் மறுவாழ்வு, தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல இயக்குனராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகராட்சி இணை ஆணையராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சுகாதாரம் மற்றும் மக்கள் குடும்பநலத்துறை இணை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.