காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் ! பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நடிகை குஷ்பு தற்போது அரசியலில் குதித்து காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில் குஷ்பு கர்நாடகாவில்  காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாக்கு சேகரிக்க சென்றார்.

அப்போது கூட்டத்தில் தொண்டர் ஒருவர் குஷ்புவை தவறான இடத்தில் தொட்டு இருக்கிறார். உடனே குஷ்பு அவரை பளார் பளார் என அறைந்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Image result for குஷ்பூ  பொன்.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் இது தொடர்பாக  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment