Categories: சினிமா

விஜய் மகன் சஞ்சய் செய்த செயலால் கடுப்பான லைக்கா! படம் ஆரம்பிக்கும் போதே இப்படியா?

தமிழ் சினிமாவில்  நடிகர் விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் அந்த திரைப்படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், சஞ்சய் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக எந்த நடிகர் நடிக்க போகிறார் எந்தெந்த பிரபலங்கள் நடிக்கிறார்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு சைலண்டாக போடப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. ஆனால், இன்னும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்குகிறது என்ற அறிவிப்பு தான் வெளியாகவே இல்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், லைக்கா நிறுவனம் சஞ்சய் மீது சற்று கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால், சஞ்சய் படத்திற்கான முழு கதையை எழுதி செப்டம்பர் மாதமே கொடுப்பதாக லைக்கா நிறுவனத்திடம் கூறியிருந்தாராம். அதன்பிறகு வேலைகள் முடியாத காரணத்தால் டிசம்பர் மாதம் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் பட பூஜை! மகனுக்காக கலந்துகொள்ளாத விஜய்?

அதற்கு காரணமே கதை அனைத்தையும் சஞ்சய் ஆங்கிலத்தில் தான் எழுதி இருக்கிறாராம். எனவே, தற்போது பக்கத்தில் இருந்து மற்றோருவர் அதனை தமிழில் மொழிமாற்றம் செய்து எழுதி வருகிறாராம். இதனால் தற்போது லைக்கா நிறுவனம் சஞ்சய் மீது கடுமையான அப்செட்டில் இருக்கிறதாம்.

இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிப்பதாகவும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் லேட்டஸ்ட் ஆன ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

8 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

10 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

46 mins ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

12 hours ago