சிவகங்கை அருகே இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழுக்கியை மருத்துவர்கள் எக்ஸ்ரே உதவியுடன் எடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு அருகில் உள்ள உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 20 வயது ஆகும். இந்த இளைஞர் தவறி கீழே விழுந்த போது ’சுழிக்கி’ என்ற எலி குத்தும் ஆயுதம் நெஞ்சில் பாய்ந்துள்ளது.
இவரது வீட்டின் பின்புறம் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் வீட்டை சுற்றி எலிகள் தொல்லை இருந்து வந்தது.எனவே எலிகள் வீடுகளைச் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளன.இந்த சமயத்தில் எலிகளை விஜய் விரட்டுவது வழக்க மாக இருந்தது. இந்நிலையில் தான் நேற்று இரவு விஜய் எலிகளை விரட்ட சென்றுள்ளார். அந்த சமயத்தில் கீழே விழுந்த போது எலியை குத்தும் சுழிக்கி, அவரது வலது மார்பில் பாய்ந்தது. இதனால் வலியால் துடித்த அவரை காரைக்குடி மருத்துவமனையில் அனுமதி அளித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் விஜயை மருத்தவர்கள் காப்பாற்றினார்கள். எக்ஸ்ரே உதவியுடன் விஜயின் உடலில் இருந்து சுழிக்கியை மருத்துவர்கள் எடுத்தார்கள்.மேலும் விஜய் தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.