சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள பிளே ஆப் சுற்று டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் பிளே ஆப் தகுதி சுற்று போட்டிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. வழக்கமாக ரசிகர்கள் நீண்ட வரிசையில் இரவு முழுக்க காத்திருக்கும் நிலை இப்போது இல்லை. இன்று பகல் 12 மணிக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23 மற்றும் 24ஆம் தேதிகளில் எந்த நாளில் சென்னை அணி விளையாட போகிறது என்ற தகவல் தற்போது வரை உறுதியாகவில்லை.