அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட 50 லட்சம் முன்பணம் – தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பன தொகையானது 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக்தில் அரசு ஊழியர்கள் தங்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பான கடன் தொகையாக முன்னதாக குறிப்பிட்ட விதிகளின்படி , 40 லட்ச ரூபாய் வழங்ப்பட்டு வந்துள்ளது. இதனை உயர்த்தி தருவோம் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டு இருந்தது.

அதே போல தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.