ஒரு பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பண்ணுவீங்க ஜி ! எதாச்சி பேசுங்க -மோடிக்காக வெற்றிடம் விட்ட தி டெலிகிராப்

5 வருடத்தில் முதல் முறையாக பிரதமர்  மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் முக்கிய தகவல்களை பற்றி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் ,இது கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்ப்பாடு செய்த செய்தியாளர்கள்  சந்திப்பு ,நான் சாதாரண தொண்டனாக கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு உட்ப்பட்டு நடக்க வேண்டும்.ஆகையால் உங்கள் கேள்விகளுக்கு கட்சியின் தலைவர் அமித்ஷா பதில் அளிப்பார் என தெரிவித்து செய்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார் மோடி .

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து தி டெலிகிராப் பத்திரிக்கை தனது முதல் பக்கத்தை பிரதமர் மோடி பேசுவதை குறித்து வெளியிட இடம் ஒதுக்கியிருந்தது. ஆனால் அவர் எதுவும் பேசாததால் அந்த வெற்றியிடத்தை அப்படியே வெளியிட்டு 1817 நாட்களுக்கு பிறகு காத்திருந்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது ,இந்த வெற்றிடம் பிரதமர் பேசுவார் என்று ஒதுக்கப்பட்டது.

இந்த இடம் பிரதமர் மோடி எப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் கூறுவாரோ,அப்பொழுது இது நிரப்படும். ஆகையால் அதுவரை இந்த வெற்றிடத்தை பின்தொடரவும் என்று தனது பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது தி டெலிகிராப் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment