4-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக அடித்த ஆசிரியர்..! சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 

கர்நாடகா, கதக் மாவட்டத்தில் 4ம் வகுப்பு மாணவன் சேட்டை செய்ததால்,  ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கி, சிறுவனை முதல் தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

தடுக்க வந்த சிறுவனின் தாயும், ஆசிரியருமான கீதா மீதும் ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவன் பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

மாணவனை தாக்கிய ஒப்பந்த ஆசிரியர் முத்தப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment