ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஓரே நாளில் தலீபான் பயங்கரவாதிகள் 60 பேர்  கொல்லப்பட்டனர் !!

  • பாக்டிகாக் , வார்டாக் , லாகர் , ஆகிய மாகாணங்களில் உள்ள  தலீபான் பயங்கரவாதிகளை மீது அதிரடி தாக்குதல் நடத்தினர்.
  • தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் ,ரேடியோ கோபுரம் மற்றும்  அவர்களின் ஆயுதகிடங்குகள் ஆகியவை அழிக்கப்பட்டன

ஆப்கானிஸ்தானில்  தலீபான் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளார்.மேலும் பல இடங்கள் தலீபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படையின் உதவியோடு  கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் பாக்டிகாக் , வார்டாக் , லாகர் , ஆகிய மாகாணங்களில் உள்ள  தலீபான் பயங்கரவாதிகளை மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படையின் உதவியோடு தரை வழியாகவும் , வான்வழியாகவும்  அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் போர் விமானங்கள் மூலம் இடை விடாமல் குண்டுகளை வீசினர்.

தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் ,ரேடியோ கோபுரம் மற்றும்  அவர்களின் ஆயுதகிடங்குகள் ஆகியவை அழிக்கப்பட்டன.

இந்த அதிரடி தாக்குதலில் ஓரே நாளில் தலீபான் பயங்கரவாதிகள் 60 பேர்  கொல்லப்பட்டனர்.  இந்த தகவலை ஆப்கானிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

author avatar
murugan

Leave a Comment