ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு-எழுதாதவர்களுக்கு மறுதேர்வு!

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக மாணவர் சேர்க்கை வாரியம் அறிவித்துள்ளது.

ஜேஇஇ அட்வான்ஸ் தேவை எழுத தவறியவர்கள் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதலாம் என்று மாணவர் சேர்க்கை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐஐடி கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் அட்வான்ஸ் தேர்வு எழுத இரண்டு முறை வழக்கமாக வாய்ப்படுளிக்கப்படும் இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று 2020ல் அட்வான்ஸ் தேர்வுக்கு இரண்டாவது முறையாக விண்ணப்பித்தும் தேர்வு எழுதாதவர்களுக்கு அடுத்தாண்டு நேரடியாக அட்வான்ஸ் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha