பாலிவுட்டிலும் கதை சர்ச்சை.! தப்பித்துக்கொண்ட அட்லீ..!தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.!

அட்லீ இயக்கி வரும் ஐவான் படக்கதையும், பேரரசு படக்கதையும் ஒன்றல்ல என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி ‘ஜவான்’ படத்தின் கதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்துடைய கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ” பேரரசு” திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. மாணிக்கம் நாராயணன் என்பவர் அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்திருந்தார். எனவே, ரோஜா காம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தற்போது உயிரோடு இல்லாததால் அவரின் பட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணத்திடம் உள்ளது.

இதையும் படியுங்களேன்- விஜய் அணிந்திருந்த சட்டையின் விலை இவ்வளவா..? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்.!

எனவே அவர் “ஜவான் “திரைப்படம் “பேரரசு” திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்படுகிறதாக தயாரிப்பாளர் சங்கத்தில் மாணிக்கம் நாராயணன் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி புகார் கொடுத்தார். அந்த புகார் மீதான விசாரணை வரும் 9-ஆம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பு சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இன்று அந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தின் கதையும், விஜய் காந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையும் ஒன்று இல்லை என அறிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment