ரவுடிகளின் சமூக வலைதள ஈர்ப்பில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற ராஜஸ்தான் காவல்துறை புதிய முயற்சி.!

இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் சமூக வலைத்தளம் மூலம் கெட்டுவிடாமல் இருக்க, ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படமால் இருக்க ராஜஸ்தான் காவல்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதில், சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களில் செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இளைஞர்கள் ரவுடிகளின் சமூக வலைதள பதிவால்  ஈர்க்கப்படாமல் இருக்க மாவட்டந்தோறும் கவுன்சலிங் மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் மாநில டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment