புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை! பிக்பாஸ் பிரபலம் வருத்தம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது மூன்றாவது சீசன் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால், மெட்ராஸ் படத்திற்கு பின், பெரிய படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்றும், முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் வருமென்று நினைத்தேன்.

ஆனால், புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி இருந்த மாதிரியே தான் இருக்கு. அதுக்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.