11 கிலோ.. 11 கோடி..! தூத்துக்குடியில் கடத்தப்பட்ட திமிங்கல எச்சம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்த முற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

தடை செய்யப்பட்ட அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் காரில் கடத்தியுள்ளனர். இவர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, உடன்குடியில் புதுமனை எம் பகுதியில் காரில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை தனிப்படை காவல் துறையினர் சோதனையின் போது பிடித்தனர். இதன் மதிப்பு 11 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடத்த முற்பட்டவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment