உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபருக்கு 6 குழந்தைகள் உள்ளதாம். 

உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்துகொள்வதென்பதே இந்திய வளாகத்தில் சில சமுதாயத்தினர் தவிர யாரும் செய்துகொள்ளாத ஒன்று. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் எனும் மாவட்டத்தில் வசிக்க கூடிய கிருஷ்ணா என்பவர் தன்னுடன் உடன் பிறந்த 3 சகோதரிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்.

ஷோபா, ரினா மற்றும் பிங்கி ஆகிய பெயர்களையுடைய இந்த மூன்று சகோதரிகளும் நன்கு படித்த பட்டதாரிகள். இவர்கள் மூவருக்கும் ஆளுக்கு இரண்டு இரண்டு என 6 குழந்தைகள் உள்ளது. இவர்களின் இந்த வித்தியாசமான திருமண வாழ்க்கை குறித்து இவர்களிடம் கேட்டாலும் இவர்கள் அது பற்றி கூறவிரும்புவதில்லையாம். ஆனால், மூவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தங்களின் குழந்தைகள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறான திருமண வாழ்க்கை நிலைக்குமா என இவர்கள் முதலில் எண்ணியிருந்தாலும், தற்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொண்டு 12 ஆண்டுகள் ஆகிறது எனவும் கூறுகின்றனர்.

author avatar
Rebekal