புல்வாமா தாக்குதலில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியது பாகிஸ்தான்…உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…!!

  • காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 CRPF வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
  • இந்த கொடூர தாக்குதலுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியது பாகிஸ்தான் என்று தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புல்வாமா மாவட்ட தற்கொலைப்படை கொடூர தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம் தான் என்று இந்திய உளவுத்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment