21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக உலகம் பார்க்கிறது.! முகேஷ் அம்பானி பெருமிதம்.!

நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. – ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதம். 

நேற்று மறைந்த ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் 90வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவரது மகனும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி பேசுகையில், நடந்து வரும் 21ம் நூற்றாண்டை உலக நாட்டுல இந்தியாவின் நூற்றாண்டாக பார்க்கிறது. என பெருமையாக குறிப்பிட்டார்.

மேலும், வரும் 2047ல் இந்தியா 40 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என நம்பிக்கையாக கூறினார். 5,000 ஆண்டுகள் பழமையான இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியை நாங்கள் எப்போதும் நன்றியுடன் நினைவுகூருவோம். என்று முகேஷ் அம்பானி தனது தந்தை திருபாய் அம்பானியின் 90வது பிறந்தநாள் விழாவில் குறிப்பிட்டார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment