அடுத்த 72 மணி நேரம் முக்கியம்….ராணுவ வீரர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்…!!

  • புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
  • விடுமுறையில் இருக்கும் அனைத்து ராணுவ வீரர்களும் உடனே பணிக்கு வர வேண்டுமென்று ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டு வரும் சூழலில் இந்திய நாட்டின் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்திய ராணுவத்தில் விடுமுறைக்கு சென்றவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டுமென்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment