மனசு நம்ப மறுக்கிறது…! இது ஒரு எதிர்பாராத பேரிடி…! – சீமான்

உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன்.  ஆனால், அவரது இழப்பு, ஒரு பேரிடியாக தான் உள்ளது.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விவேக்கின் பூத உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘மனிதன் என்றால், சிலரை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. ஆனால், எல்லாருக்கும் பிடிக்க கூடிய ஒரு மனிதனாக வாழ்ந்தவர் தன சகோதரன் விவேக். இவர் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான நபர்.

அப்துல்கலாம், விவேக்கிற்கு ஒரு கோடி மரக்கன்றுகளை நாடுங்கள் என அறிவுறுத்தினர். எனக்கு தெரிந்து இதுவரை 37 லட்சம் மரங்கன்றுகளை நட்டுள்ளார். இப்படிப்பட்ட சிறந்த மனிதனை  இழந்துள்ளது,மிகவும் கஷ்டமாக  உள்ளது. அவர் நம்முடன் இல்லை என்பதை மனசு நம்ப மாறுகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையில், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன்.  ஆனால், அவரது இழப்பு, ஒரு பேரிடியாக தான் உள்ளது. அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து க் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.