“நாட்டிற்காக…ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பிரதமர் தூங்குகிறார்” – மகாராஷ்டிர பாஜக தலைவர் பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவார் என்றும்,24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக  தூங்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக கோலாப்பூரில் பாஜக தொண்டர்களிடம் பேசும் போது பாட்டீல்  கூறியதாவது:“பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார், தினமும் 22 மணி நேரம் வேலை செய்கிறார்.பிரதமர் நாட்டிற்காக ஒவ்வொரு நிமிடமும் உழைக்கிறார் என்று கூறினார்.

மேலும்,பிரதமர் மோடி நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்று 24 மணி நேரமும் விழித்திருக்க,தூங்குவதைத் தடுக்க முயற்சிக்கிறார்.அவர் ஒரு நிமிடத்தையும் வீணாக்குவதில்லை.பிரதமர் மிகவும் திறமையாக செயல்படுகிறார்.நாட்டில் எந்த கட்சியில் இருந்தாலும் அதை நன்கு அறிந்தவர்”, என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.